பிரித்தானியாவில் காணாமல் போன பெண்ணின் சடலம் மீட்பு: கொலை வழக்கில் ஒருவர் கைது!
பிரித்தானியாவின் கோவென்ட்ரியில்(Coventry) காணாமல் போன பெண்ணைத் தேடும் பணியில், சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே மாதம் முதல் காணாமல் போன ரீனே கூல்சன் (34) தனது பிறந்த நாளான ஜூன் 17 அன்று தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளத் தவறியதை அடுத்து, அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர்.
மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறை, கூல்சனைத் தேடும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் பின்லி வூட்ஸ் பகுதியில் ஒரு சடலத்தைக் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது.
சடலம் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை என்றாலும், கூல்சனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
42 வயது ஆண் கைது
ரீனே கூல்சன் காணாமல் போனது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக முகமது டர்னியன் என்பவர் கைது செய்யப்பட்டார். 42 வயதான அவர் இப்போது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆடம் மூர் (38) என்ற இரண்டாவது நபர், குற்றவாளிக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இருவரும் சனிக்கிழமை கோவென்ட்ரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
இந்தக் குறித்துப் பேசிய காவல்துறையின் முக்கிய குற்றப் பிரிவின் துப்பறியும் கண்காணிப்பாளர் ஜிம் மன்ரோ, "இந்த மிகவும் வருத்தமான நேரத்தில்" கூல்சனின் குடும்பத்தினருடன் தங்கள் எண்ணங்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |