அவுஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணம் அந்த வீரர்தான்! மிட்செல் ஜான்சன் கடும் தாக்கு
துடுப்பாட்ட வீரர் மார்னஸ் லபுஷேன்தான் WTC இறுதிப் போட்டி தோல்விக்கு காரணம் என, அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா தோல்வி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.
இப்போட்டியில் அவுஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் மோசமாக சொதப்பினர். உஸ்மான் கவாஜா முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆனதுடன், 2வது இன்னிங்ஸில் 6 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
மற்றொரு தொடக்க வீரரான மார்னஸ் லபுஷேன் மொத்தம் 39 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் கேமரூன் கிரீன் 4 ஓட்டங்களே எடுத்தார்.
மிட்செல் ஜான்சன்
இதனை குறிப்பிட்டு பேசியுள்ள முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன், "WTC இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணியுடன் இணைந்து தயாராவதை விட்டுவிட்டு, ஐபிஎல்-க்கு ஹேசில்வுட் முன்னுரிமை அளித்தது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
அவுஸ்திரேலியாவின் பலமே பந்துவீச்சு தாக்குதல்தான். ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் கிடைக்கும் வாய்ப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கிரீன் நன்றாக ஆடவில்லை. தோல்விக்குக் காரணமே லபுஷேன்தான்" என கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
மிட்செல் ஜான்சன் 73 டெஸ்ட் போட்டிகளில் 313 விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |