ஆளி விதையை பாலில் கலந்து குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக ஆளி விதைகள் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். இது உடலுக்கு பல வகையில் நன்மை தருகின்றது.
அதிலும் ஆளிவிதைகளுடன் பால் சேர்த்து குடித்து வருவது பல நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது.
குறிப்பாக ஆளி விதைகள் மற்றும் பால் இரண்டிலும் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி6, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், புரதம், வைட்டமின் டி மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில் இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னெ்னன என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்வது?
- ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் ஆளி விதை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- இதற்குப் பிறகு, இந்த பாலை வடிகட்டிக் குடிக்கலாம்.
- வேண்டுமானால் ஆளி விதை பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலை இரவில் தூங்கும் போது குடிக்கலாம்.
நன்மைகள்
- உடல் பருமனை குறைக்க விரும்பினால் நீங்கள் ஆளி விதைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம். ஆளி விதைகள் மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்வது எடையைக் குறைக்க உதவும்.
- ஆளி விதைப் பொடியை பாலில் கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- ஆளி விதை பொடியை பாலில் கலந்து குடிப்பது இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.இதன் காரணமாக, இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.
- ஆளி விதை மற்றும் பால் கலவையானது குடலுக்கு நன்மை அளிக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தும். செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளும் நீங்குவதற்கு உதவுகிறது.
- உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் ஆளி விதையை பாலில் கலந்து சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
- உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிக்க, நீங்கள் ஆளிவிதை மற்றும் பாலுடன் கலந்து சாப்பிடலாம்.