ஒரு கிலோ ரூ.2.70 லட்சம்: உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை ருசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள், அல்போன்சா, மல்கோவா என அதன் ருசிக்கேற்ப மாம்பழங்களில் பல வகைகள் உண்டு.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் உலகின் விலையுயர்ந்த மாம்பழம் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
மத்தியபிரதேசத்தில் அதை விளைவித்த நபர்கள், காவலாக 6 நாய்கள், 4 பணியாட்களை வேலைக்கு அமர்த்திய செய்தியும் வைரலானது.
அப்படி என்ன ஸ்பெஷல் அந்த மாம்பழத்தில் என்று கேட்கிறீர்களா?
Miyazaki Mango என பெயர்பெற்ற அம்மாம்பழம் கிலோ ஒன்று ரூ.2.70 லட்சத்துக்கு விற்பனையாகும்.
ஒரு மாம்பழத்தின் எடை சுமார் 350 கிராம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
1984ம் ஆண்டு ஜப்பானின் Miyazaki என்ற நகரத்தில் விளைந்ததால், இப்பெயரே மாம்பழத்துக்கும் சூட்டப்பட்டது.
ஒரு டயனோசரின் முட்டை போன்ற வடிவமைப்புடன் சிவப்பு கலந்த பர்பிள் நிறத்தில் காணப்படும்.
மற்ற மாம்பழங்களை விட சராசரியாக 15 சதவிகிதம் அதிகம் சர்க்கரை நிறைந்ததாகவும் இருக்கும்.
ஜப்பானில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை விளைவிக்கப்படும் இம்மாம்பழங்களுக்கு, நீண்ட நேர சூரிய வெளிச்சம், மிதமான மழை மற்றும் இதமான காலநிலை இருக்க வேண்டுமாம்.
மருத்துவ பயன்கள்
ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிகம் நிறைந்தது
பீட்டா கரோட்டின் மற்றும் போலிக் ஆசிட் நிறைந்தது
கண்களுக்கு நல்லது
புற்றுநோய் வராமல் தடுக்கும்
கொழுப்பை குறைக்கும்
தோலுக்கு மிக நல்லது.