முதலமைச்சராகிறார் ஸ்டாலின்! பெரும்பான்மையை விட அதிக இடங்களில் திமுக ஆதிக்கம்: அதிமுக அமைச்சர்கள் பலர் பின்னடைவு
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான 234 தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலை வகித்துள்ளது.
இன்று காலை முதல் நடைபெற்று வரும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதன் படி நடைபெற்று முடிந்த பல சுற்று முடிவுகளில், திமுக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தாண்டி 153 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி ஒரு சில பகுதிகளில் இப்போது வெற்றிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுகவில் ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம், கடலூர் தொகுதியி எம்.சி.சம்பத், நன்னிலம் தொகுதியில் காமராஜ், மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமின், ஆவடி தொகுதியில் பாண்டியராஜன், கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சங்கரன்கோவிலில் வி.எம்.ராஜலட்சுமி, ராஜபாளையம் பகுதியில் ராஜேந்திர பாலாஜி, ஜோலார்பேட்டையில் கே.சி.வீரமணி ஆகியோர் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
இந்த தொகுதிகளில் எல்லாம் ஆளும் தரப்பு மீதான அதிருப்தியும், கோபமும்தான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.