கொரோனாவிலிருந்து குணமடைந்தார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடந்த 12ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது, இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து முதலமைச்சர் முக ஸ்டாலின் முழுமையான குணமடைந்து விட்டதாகவும், நாளை வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
எனினும் ஒரு வார காலம் வீட்டில் தங்கியிருந்தபடியே ஓய்வெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.