ஆட்சி அமைக்க இருப்பது திமுக தான்..ஆனால்! வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக ஸ்டாலின் முக்கிய அறிக்கை
2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்ற வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரப்படி, திமுக கூட்டணி 138 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
அதிமுக கூட்டணி 93 இடங்களில் முன்னிலையில் உள்ளது, மக்கள் நீதி மய்யம் 1 தொகுதியில் முன்னிலைப்பெற்றுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 30%க்கும் குறைவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. ஆட்சி அமைக்க இருப்பது திமுக தான்!
வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள நமது நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மிக மிக விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.
பெரிய குளறுபடிகள் ஏதுவும் செய்து விட முடியாது என்றாலும், எங்காவது அதிகாரி அதைச் செய்து விடக் கூடும் என்பதால் அதிகக் கவனம் அவசியம்.
முழு வாக்கு எண்ணிக்கை முடிவும் வரை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது. எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர் குலைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் உடனாடியாகத் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். வெற்றிச் சான்றிதழ் பெறும் வரைக்கும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது.
தொண்டர்கள் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும்.
பெருந்தொற்று பரவக் காரணம் ஆகிவிடக்கூடாது. திராவிட முன்னேற்றக் கழகததின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது.
நம்மையும் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம் என மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021
முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது.
வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். #Covid19 காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும். pic.twitter.com/Lp9Lb8LkNp