கார் விபத்தில் உயிரிழந்த மாடல் அழகிகளுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்
இந்தியாவில் நடந்த கோர விபத்தில் கேரள அழகியும் மற்றும் அவரது தோழியும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அன்சி கபீர்(26). இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் கேரள பட்டம் வென்றுள்ளார். இவருடன் இதே அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் அஞ்சனா சாஜன் (24)இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த அழகிப் போட்டிகள் மூலம் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினார்.
அந்த வகையில் ஆன்சி, அஞ்சனா உட்பட 4 பேர் திருச்சூரை சேர்ந்த நண்பர்களுடன் காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தை குறித்து எர்ணாகுளம் பொலிசார் தீவிர விசாரணை நடத்திய போது சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காக ராய் வயலாட் எனும் ஓட்டலின் உரிமையாளர் உட்பட 5 பேரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்சி மற்றும் அஞ்சனாவிற்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல்.கிடைத்துள்ளது.
விபத்துக்கு முன்னதாக அழகிகள் இருவரும் தங்கி இருந்த No.18 விடுதியில் விஐபிகள் மட்டும் கலந்து கொள்ளும் போதை விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். சைஜு, என்பவர் தான் ஆன்ஷி கபீர், மற்றும் அஞ்சனாவை இந்த போதை பொருள் பார்ட்டிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.
நேரம் ஆகிவிட்டதால் இருவரும் தங்களுடன் வந்தவர்களை அழைத்து கொண்டு அவசர அவசரமாக ஓட்டலை விட்டு வெளியேறிய போது இவர்களை ஆடி கார் ஒன்று பின் தொடர்ந்து வந்துள்ளது. இதனால் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
எனவே கார் விபத்தில் உயிரிழந்த இரண்டு மாடல் அழகிகளுக்கும் போதை மருத்து ஆட்களிடம் தொடர்பு இருந்ததா? என்கிற கோணத்தில் விசாரணை சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.