எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நபர்: பிரான்சில் சடலமாக கண்டெடுப்பு
ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஒருவர் பிரான்சில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நபர்
ஏராளம் இளம்பெண்களை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்காக இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர் டேனியல் சியாட் (69).

பிரான்சிலுள்ள ஆட்கடத்தல் சிறப்புப் பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்த டேனியல் மீது வன்புணர்வு முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
அத்துடன், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் டேனியல் பெயர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இடம்பெற்றுள்ளது.
பிரான்சில் சடலமாக கண்டெடுப்பு

டேனியர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகிலுள்ள Colombes என்னுமிடத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் திங்கட்கிழமை மாலை உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |