இந்திய ராணுவத்தில் இணைய மாடலிங்கை துறந்த பெண் - யார் இந்த கஷிஷ் மெத்வானி?
இன்றைய காலகட்டத்தில் மாடலிங் மூலம் கிடைக்கும் உடனடி புகழை துறந்து, இளம்பெண் ஒருவர் நாட்டிற்காக சேவை செய்ய ராணுவ பணியை தேர்வு செய்துள்ளார்.
கஷிஷ் மெத்வானி
மும்பைக்கு அருகிலுள்ள உல்லாஸ்நகரில், 2002 ஜனவரி 9 அன்று விஞ்ஞானியான தந்தைக்கும், ராணுவ பள்ளியில் ஆசிரியையான தாய்க்கும், பிறந்தவர் கஷிஷ் மெத்வானி.

வீட்டில் அழகிப் போட்டியைப் பார்த்துக் கொண்டே மிஸ் இந்தியா ஆக வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். அதே சமயம், நாட்டிற்குச் சேவை செய்தவர் என்று அறியப்பட வேண்டும் என்ற கனவும் இருந்துள்ளது.
சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் உயிரித்தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc), நரம்பியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார்.

மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா அதன் பிறகு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் அதனை உதறிய கஷிஷ் மெத்வானி தனது கனவை நோக்கி பயணித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.

அதன் பின்னர், 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள்(CDS) தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அதன் பின்னர், சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதமியில் 11 மாதங்கள் கடுமையான பயிற்சியை நிறைவு செய்தார்.
ஆபரேஷன் சிந்தூர்
பின்னர் செப்டம்பர் 6 அன்று நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பிற்குப் பிறகு, அவர் இந்திய ராணுவத்தில் லெப்டினன்டாகப் பதவி உயர்வு பெற்று, விமானப் பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர்ந்துள்ளார்.
சமீபத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலும், கஷிஷ் மெத்வானி முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக NCCயில் இணைந்து அவர் செயலாற்றிய போது, குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்றதோடு, பிரதமர் நரேந்திர மோடியால் அகில இந்திய சிறந்த கேடட் என்ற கௌரவமும் வழங்கப்பட்டது.
இந்த அனுபவம் ராணுவம் தான் அவருக்கு சரியான இடம் என்பதை உணர்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது மட்டுமின்றி, பரதநாட்டிய கலைஞர், தபலா கலைஞர், வினாடி வினாப் போட்டியாளர், விவாதப் பேச்சாளர் போன்ற பல்வேறு திறமைகளை வைத்துள்ளார்.
மேலும், தேசிய அளவிலான பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் கூடைப்பந்துப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
2020 கோவிட்-19 ஊரடங்கின் போது, பிளாஸ்மா, இரத்தம் மற்றும் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காக மெத்வானி 'கிரிட்டிகல் காஸ்' என்ற அமைப்பைத் தொடங்கினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |