கொரோனா பெருந்தொற்று இன்னும் "ஓராண்டில் நிறைவுக்கு வரலாம்"- மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி பரபரப்பு தகவல்
கொரோனா பெருந்தொற்று இன்னும் ஓராண்டில் நிறைவுக்கு வரலாம் என்று கோவிட்-19 தடுப்புமருந்து நிறுவனமான மாடர்னாவின் CEO தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லந்தின் Neue Zuercher Zeitung ஊடக நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், மாடர்னா மருந்து நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபான் பன்செல் (Stephane Bancel) அதனைக் கூறினார்.
அவர் இது குறித்து கூறியதாவது; "கடந்த 6 மாதங்களில் தடுப்புமருந்தின் உற்பத்தி ஆற்றல் விரிவுபடுத்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டால், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் உலகில் உள்ள அனைவருக்கும் தேவையான அளவில் தடுப்புமருந்து தயாராக இருக்கலாம்.
Booster தடுப்பூசிகளுக்கும் போதிய அளவில் ஏற்பாடு செய்யப்படலாம்" என்று பன்செல் கூறினார்.
Picture: Business Insider
அதேபோல், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படுவது கூடிய விரைவில் சாத்தியமாகலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் "டெல்டா வகைக் கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் நாளடைவில் இயற்கையாகவே எதிர்ப்பாற்றலைக் கொண்டிருப்பர் " என்று பன்செல் நம்பிக்கை தெரிவித்தார்.