70 ஆண்டுகால தூதரக உறவு.. ஜேர்மனியில் ஸ்கோல்ஸ்-மோடி பேச்சுவார்த்தை
ஜேர்மனி-இந்தியா தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜேர்மனி சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள மோடி, முதற்கட்டமாக ஜேர்மனி சென்றடைந்துள்ளார். தலைநகர் பெர்லினுக்கு சென்றுள்ள அவர், ஜேர்மனி சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜேர்மனி-இந்தியா இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இருநாட்டு தலைவர்களும் 6வது ஜேர்மனி-இந்தியா அரசுகளுக்கிடையிலான ஆலோசனைக்கு தலைமை வகிக்கின்றனர்.
மேலும், ஜேர்மனியில் தங்கள் இலாகா மந்திரிகளுடன் பல்வேறு இந்திய மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.