இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் அசெம்ப்ளி லைன்: திறந்து வைக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி
இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் அசெம்ப்ளி லைனை பிரான்ஸ் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இன்று (பிப்ரவரி 17), கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேமகலில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் Final Assembly Line-ஐ (FAL) திறந்து வைக்க உள்ளனர்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த திட்டம் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) மற்றும் ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுத் திட்டமாகும் .
7,40,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை, உற்பத்தி, இறுதி அசெம்ப்ளி மற்றும் Maintenance, Repair & Overhaul (MRO) சேவைகளையும் வழங்கும்.

ஆரம்பத்தில் ஆண்டுக்கு 10 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும், தேவைக்கேற்ப உற்பத்தி அதிகரிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் 450 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும்.
H125 ஹெலிகாப்டரின் சிறப்புகள்
H125 உலகின் மிக அதிகம் விற்பனையான ஒற்றை என்ஜின் ஹெலிகாப்டர் ஆகும்.
1 பைலட் + 6 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
சுமார் 630 கி.மீ தூரம் பறக்கும் திறன் கொண்டது.
எவரெஸ்ட் சிகரத்தில் தரையிறங்கிய ஒரே ஹெலிகாப்டர் என்ற சாதனை பெற்றது.
பயன்பாடுகள்: அம்புலன்ஸ் சேவை, தீ அணைப்பு, சுற்றுலா, சட்டம்-ஒழுங்கு, பேரிடர் மீட்பு, உயரமான மலைப்பகுதி இராணுவ நடவடிக்கைகள்.
எதிர்கால திட்டங்கள்
2027ஆம் ஆண்டில் முதல் “Made-in-India” H125 ஹெலிகாப்டர்கள் வெளியிடப்படும்.
அடுத்த கட்டத்தில் H125M எனும் இராணுவ பதிப்பு, அதிகளவு இந்திய தொழில்நுட்பம் சேர்த்து தயாரிக்கப்படும்.
தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் நீண்டகால இலக்கு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |