என்னை உயிரோடு செல்ல அனுமதித்த முதல்வருக்கு நன்றி! விமானநிலையத்தில் சொன்ன மோடி
பஞ்சாப் முதல்வருக்கு நரந்திரமோடி நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் 42,750 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். அதன் படி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பஞ்சாபில் உள்ள பதிண்டாவில் தரையிறங்கினார்.
அதன் பின், அங்கிருந்து ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்தார். ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக செல்ல முடியவில்லை.
இதற்கிடையில், நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்த நிலையில், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தன்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் பிரதமர் சித்துவிற்கு நன்றி தெரிவித்ததாக கூறும் படி, அங்கிருக்கும் விமானநிலையத்தில், பஞ்சாப்அதிகாரிகளிடம் மோடி தெரிவித்து கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.