லண்டனில் 8 வயது சிறுமிக்கு ஏற்பட்ட மறக்க முடியாத துயரம்: 30 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த நீதி
கிழக்கு லண்டனில் 8 வயது சிறுமியை வன்கொடுமைக்கு இரையாக்கிய நபருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
8 வயதேயான சிறுமியை
கிழக்கு லண்டனில் பேலன்ஸ் தெருவை சேர்ந்த 51 வயது முஹம்மது தாலுக்தார் என்பவருகே Snaresbrook கிரவுன் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
1990களில் கிழக்கு லண்டனில் உள்ள டவர் ஹேம்லெட்ஸில் குறித்த நபர் அப்போது 8 வயதேயான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து துன்புறுத்தியுள்ளார். ஆனால் 2020ல் தான் இந்த விவகாரம் வெளிச்சம் கண்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சாட்சிகளின் மொழி மற்றும் டி.என்.ஏ ஆதாரங்கள் இல்லாமல் அதிகாரிகள் திணறினர். இருப்பினும் நம்பிக்கையை கைவிடாத அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நபரின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணையை மூனெடுத்துள்ளனர்.
அத்துடன் மருத்துவ ஆதாரங்களையும் சேகரித்து, அப்போது என்ன நடந்தது என்பதை உறுதி செய்துள்ளனர். மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண் தாம் மேற்கொண்ட உளவியல் ஆலோசனை அமர்வுகளின் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் அனுமதி அளித்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட தாலுக்தார், தீவிர விசாரணையின் முடிவில் Snaresbrook கிரவுன் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அவர் குற்றவாளி என்பதை உறுதி செய்தது.
இந்த வழக்கு உத்வேகமாக இருக்கும்
இந்த வழக்கு விசாரணையை முன்னெடுத்த அதிகாரி Paul Hawthorn தெரிவிக்கையில், இந்த விசாரணை முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்ணின் துணிச்சலை பாராட்ட வேண்டும் என்றார்.
மட்டுமின்றி, இதுபோன்ற அருவருப்பான துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேசுவதற்குப் பயப்படக்கூடிய மற்றவர்களுக்கும் இந்த வழக்கு உத்வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் சார்பாக நீதியைப் பெறுவதில் அதிகாரிகள் உண்மையான உறுதியை வெளிப்படுத்தினர். அவர்களின் அர்ப்பணிப்புக்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் Paul Hawthorn தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தாலுக்தார் மூன்று பலாத்கார குற்றச்சாட்டு மற்றும் நான்கு வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மே மாதம் 31ம் திகதி Snaresbrook கிரவுன் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |