குப்பை தொட்டியில் கொட்டி கிடந்த ரூபாய் நோட்டுகள்! ஆச்சரியத்தில் பொதுமக்கள் செய்த செயல்.. வைரல் புகைப்படம்
இந்தியாவில் குப்பை தொட்டியில் ருபாய் நோட்டுகள் கட்டு கட்டாக கொட்டி கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 73வது குடியரசு தினம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை புறநகர் பகுதியில் டாஸ்மாக்கு விடுமுறை அளித்தும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு பதிவுவாகியுள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலையில் உள்ள டாஸ்மாக் பார் அருகில் குப்பை மேட்டில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
அப்போது விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களின் அட்டைப்பெட்டியில் ரூபாய் நோட்டுகளையும், கால்குலேட்டரையும் அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.
குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளுடன் பணம் மற்றும் மதுபாட்டில்கள் கேட்பாரற்று கிடந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.