1500 பேருக்கு விருந்து.. குரங்கின் இறுதி சடங்குக்கு கிராமமே அழுத வினோத சம்பவம்.. வைரல் வீடியோ
இந்தியாவை சேர்ந்த கிராமம் ஒன்றில் இறந்த குரங்குக்கு 1500 நபர்கள் ஒன்று சேர்ந்து இறுதி சடங்கு நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில்கடந்த டிசம்பர் 29 அன்று குளிரால் இறந்த லாங்கூர் வகை குரங்கு ஒன்று பரிதாபமாக இறந்துள்ளது.
இந்நிலையில் கிராமமே ஒன்று சேர்ந்து அந்த குரங்குக்கு இறுதி சடங்கு நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் பணம் சேகரித்து அறிவிப்பு அட்டைகள் அச்சிட்டு சுமார் 1,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர்.
ஒரு பெரிய பந்தலின் கீழ் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக அமர்ந்து உணவு உண்டனர். குரங்கின் சடலத்தை தகனம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது பாடல்கள் பாடிக்கொண்டே தூக்கிச்செல்லும் இறுதி ஊர்வல காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன.
The residents of Dalupura village in Rajgarh district first held the funeral rites of a langur that died of the cold on 29th December with the chanting of hymns, now hosted a mass feast for more then 1,500 people as part of funerary rituals. pic.twitter.com/aLSOPMqOG6
— Anurag Dwary (@Anurag_Dwary) January 11, 2022
உயிரிழந்த இந்த குரங்கு செல்லபிராணியாக வளர்க்கப்படவில்லை என்றாலும் கிராமத்திற்கு அடிக்கடி வந்து சென்றதால் மக்கள் இந்த செயலை செய்துள்ளனர். இந்நிலையில் கோவிட்-19 நெறிமுறைகளை மீறியதாக அந்த கிராமத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.