மரத்தில் இருந்து சுற்றுலா பயணியின் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு
கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகளை பறித்துச் சென்ற குரங்கு மரத்தின் மீதிருந்து அதனை பறக்க விட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டகுரங்கு
தமிழக மாவட்டமான திண்டுக்கல், கொடைக்கானல் குணா குகைப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.
அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி குணா குகைப் பகுதியை பார்வையிட வந்தார்.
அவர் கையில் 500 ரூபாய் நோட்டு கட்டுகளை வைத்திருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த குரங்கு ஒன்று சுற்றுலா பயணி கையில் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டு கட்டுகளை பிடுங்கிச் சென்று மரத்தின் மீது ஏறி அமர்ந்தது.
பின்னர் அங்கு இருந்து கொண்டே ரூபாய் நோட்டு கட்டுகளை பிரித்து ஒவ்வொரு தாளாக கீழே வீச தொடங்கியது. அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ரூபாய் தாள்கள் கீழே பார்ப்பதை ஆச்சரியமாக பார்த்தனர்.
இதையடுத்து, பணப் பையை பறிகொடுத்த சுற்றுலாப் பயணி பொறுமையாக காத்திருந்து மேலிருந்து கீழே விழும் ரூபாய் தாள்களை சேகரித்தார். அவருக்கு அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகளும் உதவினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |