விஷம் வைத்து கொன்று, சாக்கு முட்டையில் கட்டி வீசப்பட்ட 46 குரங்குகள்! அதிர்ச்சியூட்டும் சம்பவம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து, சாக்கு மூட்டைகளில் கட்டி அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூரில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொன்று கோணிப்பைகளில் கட்டி சக்லேஷ்பூர் - பேகூர் சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அவற்றில் 14 குரங்குகள் உயிருடன் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது.
14 குரங்குகளையும் மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர், எஞ்சிய 46 குரங்குகள் உயிரிழந்தன.
இதுகுறித்து கர்நாடக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் இதுகுறித்த படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு, 'விலங்குகள் மீதான இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது' என, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.