தீவிரமடையும் மொந்தா புயல்.., அடுத்த 3 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இது, மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைந்து, அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது.
அதன்படி, அந்தமான், நிக்கோபார் தீவுக்கு மேற்கே சுமார் 610km தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 790km தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
அதன் பிறகு, அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை மறுநாள் காலை தீவிர புயலாக மாறக்கூடும்.
இது நாளை மறுநாள் மாலை ஆந்திராவின் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில், சென்னை கடற்கரை பகுதியில் 60km வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
எனவும், மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் மொந்தா புயல் எச்சரிக்கை காரணமாக ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 29ஆம் திகதி வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |