காதலியுடன் சேர்ந்து முன்னாள் மனைவியை கொலை செய்த நபர்: நீதிமன்றத்தின் வித்தியாசமான முடிவு
கனடாவின் மொன்றியலில், தன் புதிய காதலியுடன் சேர்ந்து தன் முன்னாள் மனைவியை கொலை செய்தாக நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் வித்தியாசமான முடிவு
2022ஆம் ஆண்டு மே மாதம், ஓட்னா (Odna Daudier, 32) என்னும் பெண் Rivière-des-Prairies என்னுமிடத்தில், தனது காரில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தற்போது ஓட்னாவின் முன்னாள் கணவரான ஜாக் (Jacques Adonai Charpentier) மற்றும் அவரது புதிய காதலியான மெலிஸ்ஸா (Mélissa Estimé) ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
விடயம் என்னவென்றால், ஓட்னா எப்படி உயிரிழந்தார் என்பது இதுவரை தெரியவில்லை. என்றாலும், அவரது முன்னாள் கணவரான ஜாக் மற்றும் அவரது காதலி குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
ஜாக்கும் ஓட்னாவும் பிரிந்தாலும், ஓட்னாவை விடமுடியாமல் அவரையே எப்போதும் பின்தொடர்ந்துள்ளார் ஜாக். ஆக, முன்னாள் மனைவியை விடமுடியாமல் தவித்த ஜாக், தனது காதலியுடன் சேர்ந்து அவரைக் கொல்ல முடிவு செய்துள்ளார்.
அதன்படி, உடற்கூறு ஆய்வில் கண்டுபிடிக்கமுடியாத ஒரு விஷத்தை ஓட்னாவுக்குக் கொடுத்து, அவரது காரிலிருந்த GPS மூலம் அவரைப் பின்தொடர்ந்து, அவரைக் கொன்று அவரது உடலை Rivière-des-Prairies என்னுமிடத்தில் போட்டுவிட்டதாக ஜாக் மற்றும் மெலிஸ்ஸா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
CCTV கமெராக்கள் மற்றும் மொபைல் டேட்டா மூலம் அவர்களுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
தம்பதியருக்கு 25 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர இயலாத வகையில் ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |