வீடு ஒன்றில் சில பாம்புகள் இருக்கும் என நினைத்த பாம்பு பிடி வீரர்! 100 பாம்புகள் சூழ்ந்ததால் அதிர்ச்சி.. சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் 100 விஷப்பாம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Northern Californiaவில் உள்ள வீட்டில் தான் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்குள்ள வீட்டில் வசிக்கும் பெண்ணொருவர் தனது வீட்டில் Rattle பாம்புகள் சிலதை கண்டதாக பாம்புபிடிப்பதில் வல்லவரான அல் உல்புக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து அங்கு வந்த உல்புக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஏனெனில் வீட்டில் உள்ள ஒரு இடத்தின் அடிப்பகுதியில் 100க்கும் அதிகமான பாம்புகள் இருந்ததை அவர் கண்டுபிடித்தார்.
Northern Californiaல் உள்ள மிக கொடிய விஷம் கொண்ட பாம்புகள் அவை என தெரியவந்தது. அதில் 22 பெரிய பாம்புகளும் 59க்கும் அதிகமான குட்டி பாம்புகளும் இருந்தன.
இந்த அந்த பாம்புகள் அதற்கான கருவிகள் மூலம் லாவகமாக பிடிக்கப்பட்டன. இது குறித்து உல்ப் கூறுகையில், நான் 32 ஆண்டுகளாக பாம்புகளை பிடிக்கும் பணியில் ஈடுபடுகிறேன்.
அதிகபட்சமாக ஒரு வீட்டில் இருந்து 5 பாம்புகளை தான் பிடித்துள்ளேன். இந்த முறை இவ்வளவு பாம்புகள் இருக்கும் என கருதவில்லை.
வீட்டின் அஸ்திவாரம் அத்தகைய பாறைப் பகுதியில் தோண்டப்பட்டதால், பாம்புகள் வீட்டின் கீழ் பகுதியில் தங்கள் சொந்த வீட்டை எளிதாக அமைத்திருக்கலாம் என கூறியுள்ளார்.