பாடசாலைகள் ஆரம்பம்: வெளியானது சுற்றுநிரூபம்
எதிர்வரும் 8ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தரம் 10, 11, 12 மற்றும் 13ஆம் ஆண்டு மாணவர்களுக்கு எதிர்வரும் 8ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Professor Kapila Perera) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலை ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும் எனவும், இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 8ஆம் திகதி முதல் அனைத்து கல்வி நிர்வாகப் பிரிவினரும் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.