பிரித்தானியாவிற்கு எந்த அச்சுறுத்தலையும் ரஷ்யா ஏற்படுத்தாது... ரஷ்ய தூதரகம் வெளிப்படை
பிரித்தானியாவைத் தாக்கும் எண்ணம் ரஷ்யாவிற்கு இல்லை என்று லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
எந்த அச்சுறுத்தலும் இல்லை
அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு மற்றும் தினசரி சைபர் தாக்குதல்கள் குறித்த பிரித்தானிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது. ரஷ்யா உட்பட புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாதுகாப்புக்கான அணுகுமுறையை தீவிரமாக மாற்றப்போவதாக பிரித்தானியா திங்களன்று கூறியது.
இந்த நிலையில், ஐரோப்பா போர், வளர்ந்து வரும் ரஷ்ய அச்சுறுத்தல், புதிய அணுசக்தி அபாயங்கள் மற்றும் தினசரி சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறது என்று ஹீலி கூறினார்.
இதனையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய தூதரகம், ரஷ்யாவால் பிரித்தானியாவிற்கும் அதன் மக்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. எங்களுக்கு எந்த ஆக்கிரமிப்பு நோக்கங்களும் இல்லை, பிரித்தானியாவைத் தாக்கும் திட்டமும் இல்லை.
நாங்கள் அவ்வாறு செய்வதில் ஆர்வமும் இல்லை, அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவுகள் பனிப்போருக்குப் பிறகு மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளன.
மதிப்பாய்வை விமர்சித்தது
பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து அவை மேலும் மோசமடைந்தன. மட்டுமின்றி, பிரித்தானியாவும் பிற நேட்டோ உறுப்பினர்களும் உக்ரைனுக்கு அதிக அளவு இராணுவ உதவி மற்றும் பிற ஆதரவை வழங்கியுள்ளனர்.
இதனிடையே, லண்டனில் உள்ள சீனத் தூதரகம் பிரித்தானியாவின் பாதுகாப்பு மதிப்பாய்வை விமர்சித்தது, செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானிய இராணுவ விரிவாக்கத்தை நியாயப்படுத்த சீனாவின் பாதுகாப்புக் கொள்கையை இந்த மதிப்பாய்வு வேண்டுமென்றே தவறாக சித்தரித்துள்ளது என்று கூறியது.
பிரித்தானியாவின் இந்த மதிப்பாய்வு சீனாவை ஒரு அதிநவீன மற்றும் தொடர்ச்சியான சவால் என்று குறிப்பிட்டிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |