மொத்தமாக தீ விழுங்கிய குடியிருப்புகள்... வெளியேறிய ஆயிரக்கணக்கானோர்: அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் காட்டுத்தீயில் சிக்கி 600 வீடுகள் மொத்தமாக சேதமடைந்து, ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ள நிலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொலராடோ மாகாணத்தில் இதுவரையான காட்டுத்தீ வரலாற்றில் இது மிக மோசமான இழப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளில் இருந்து காட்டுத்தீ மளமளவென பரவி வருகிறது. இதனால் இதுவரை 25,000 பேர்கள் பாதுகாப்பு கருதி வெளியேறியுள்ளனர்.
6 பேர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 26,000 வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியுள்ளனர். Marshall பகுதி காட்டுத்தீயானது இதுவரை 1,600 ஏக்கர் நிலப்பரப்பை சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காற்று வேகமாக வீசுவதால் அச்சுறுத்தலும் அதிகம் என மாகாண நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொலராடோ மாகாணத்தில் சமீபத்திய காட்டுத்தீ வரலாற்றில் அதிக குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது தற்போது மட்டுமே என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2020 ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட Cameron Peak காட்டுத்தீயானது மொத்தமாக 208,913 ஏக்கர் நிலப்பரப்பை சேதப்படுத்தியதுடன், 184 குடியிருப்புகளை தீக்கிரையாக்கியது. 2013 ஜூலை மாதம் ஏற்பட்ட Black Forest காட்டுத்தீயானது கடும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், 498 குடியிருப்புகளை மொத்தமாக சிதைத்தது.
தற்போது Superior பகுதியில் குடியிருக்கும் 4,000 பேர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி, Louisville பகுதியில் வசிக்கும் 21,000 மக்களுக்கும் வெளியேறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சாகமோர் உட்பிரிவு பகுதியில் குறைந்தது 370 குடியிருப்புகள் தீக்கிரையானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Marshall பகுதி காட்டுத்தீயானது குறைந்தது 1200 ஏக்கர் நிலப்பரப்பை சேதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று பலமாக வீசுவதால் வாகனங்கள் தூக்கி வீசப்பட வாய்ப்புள்ளதாக கூறி சாலைகள் மூடப்பட்டுள்ளன.
டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளை நிறுத்தியுள்ளனர்.