இந்தியாவிலேயே அதிகமாக படித்த நபர்.., யார் தெரியுமா?
மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீகாந்த் ஜிச்கர் 1954ஆம் ஆண்டு பிறந்தார்.
இந்திய வரலாற்றில் மிகவும் படித்த நபராகக் ஸ்ரீகாந்த் ஜிச்கர் கருதப்படுகிறார்.
நாக்பூரில் MBBS மற்றும் MT பட்டம் பெற்றதன் மூலம் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீகாந்த் மொத்தம் 20 பட்டங்களை பெற்றுள்ளார்.
இதில் வணிக நிர்வாகம் மற்றும் சர்வதேச சட்டத்தில் முதுகலைப் பட்டம், வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், இதழியலில் இளங்கலைப் பட்டம் மற்றும் சமஸ்கிருதத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில் தான் மருத்துவராக பணியாற்றிய சமயத்தில் 1978ல் இந்தியாவின் மிக கடினமான தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் ஆனார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளில் அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் யுபிஎஸ்சி தேர்வெழுதி மீண்டும் ஐஏஎஸ் ஆனார்.
அதன்படி, ஐஏஎஸ் பணியில் சேர்ந்த 4 மாதத்தில் அதனையும் ராஜினாமா செய்தார்.
ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்த 4 மாதத்தில் வந்த மகாராஷ்ட்ரா பொதுத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
அப்போது அவருக்கு வயது 26, இளம் வயதில் எம்எல்ஏ ஆன முதல் இந்தியர் ஸ்ரீகாந்த் ஜிச்கர் தான். இதன்பின் சட்டமேலவை எம்எல்ஏ, மாநில அமைச்சர், ராஜ்ய சபா எம்பி என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
ஒருகட்டத்தில் அமைச்சராக 14 வெவ்வேறு இலாகாக்களை கவனிக்கும் அளவுக்கு மகாராஷ்ட்ரா அரசியலில் முக்கிய புள்ளியாக திகழ்ந்தார்.
ஆனால், 1998 மற்றும் 2004ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல்களில் தோல்வியை தழுவினார்.
அதன் பின் ஜூன் 2, 2004 அன்று, தனது 49 வயதில் கார் விபத்தில் சிக்கி ஸ்ரீகாந்த் ஜிச்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |