தாலியை கழற்றி செய்த சத்தியம்! முந்திரிக்காட்டில் 17 வயது மகளுடன் தூக்கில் சடலமாக தொங்கிய தாயார்... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி
தமிழகத்தில் முந்திரி காட்டில் தாய், மகள், மகன் மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (40) இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், மகள் திவ்யா (17) அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பும் மகன் திவாகரன் (15) பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். கணவர் பாக்கியராஜ் தொடர்ந்து குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இதனால் பாக்யராஜ் மனைவி பாக்கியலட்சுமி கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவனை அருகில் உள்ள கோவிலுக்குச் அழைத்து சென்று இனி தங்கள் மகளுக்கு திருமணம் ஆகும் வரை குடிக்கக்கூடாது என கோவிலில் தனது தாலியினை கழற்றி வைத்து அதன் மீது சத்தியம் செய்து , பின் அவரது கையில் கயிறு கட்டி அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிக்காமல் ஒழுங்காக இருந்த கணவர் திடீரென மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி பாக்கியலட்சுமி அவரிடம் இனிமேல் குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டு ஏன் தற்பொழுது குடித்துவிட்டு வந்துள்ளீர்கள் என கணவரிடம் கேட்டுள்ளார்.
காலையில் அவர்களது மகள் மகன் ஆகிய இருவரையும் தங்களுக்கு சொந்தமான முந்திரிக்காட்டிற்கு ஆடு மேய்க்க அனுப்பியுள்ளார் பாக்கியலட்சுமி பின் சிறிது நேரத்திற்கு பிறகு அவரும் முந்திரி காட்டிற்கு சென்றுள்ளார்.
பின் வெகு நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் முந்திரி தோப்பிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கே உள்ள முந்திரி மரத்தில் மூன்று பேரும் அருகருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களது உடலை மீட்டு அவரது வீட்டுக்கு கொண்டு வந்து வைத்துள்ளனர்.
தகவலின் பேரில் வந்த பொலிசார் 3 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் பாக்கியராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.