தொப்புள் கொடியுடன் வீசிய குழந்தையை பாதுகாத்த நாய்கள்! நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்
இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை இரவு முழுவதும் நாய்கள் பாதுகாத்த நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தின் லோர்மி என்ற கிராமத்தில் வயல்வெளியில் பிறந்த குழந்தையொன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை பத்திரமாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர், விசாரணையில் குழந்தை பிறந்தததும் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் வயல்வெளியில் வீசிச் சென்றது தெரியவந்தது.
எனினும் இரவு முழுவதும் அங்கிருந்த நாய்கள், குழந்தையை பத்திரமாக கவனித்து வந்துள்ளது, அடுத்த நாள் காலை குழந்தை அழும் சத்தம் கேட்டு விரைந்து வந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இரவு முழுவதும் நாய்கள் அருகே இருந்தாலும் குழந்தைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களுடன் Jeev Aashraya என்ற நபர் தன்னுடைய பேஸ்புக் பதிவில், பெற்றோர்களால் தூக்கி வீசப்பட்ட குழந்தையை தாய் போன்று நாய்கள் பாதுகாத்தது என்பதை நம்ப முடியவில்லை, மனிதர்களை விடவும் மில்லியன் தடவைகள் உயர்ந்தவை, காலையில் கிராம மக்கள் பார்க்கும் வரை குழந்தைக்கு சிறு கீறல் கூட இல்லை என பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.