பிள்ளைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக என்னென்னவோ திட்டமிட்டிருந்தார்கள்... லண்டன் தீவிபத்தில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாய் கண்ணீர்

London United Kingdom Fire
By Balamanuvelan Dec 20, 2021 01:20 PM GMT
Report

லண்டன் தீவிபத்தில் பலியான இரண்டி ஜோடி இரட்டைக் குழந்தைகளின் தாய், பிள்ளைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக என்னென்னவோ திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இப்போது எல்லாமே முடிந்துபோய்விட்டது என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன்று, தெற்கு லண்டனிலுள்ள, Sutton என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில், இரவு 7.00 மணியளவில் திடீரென தீப்பற்றியது.

கொழுந்து விட்டெரிந்த அந்த தீயை அணைக்க, 8 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த 60 தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராட வேண்டியிருந்தது.

புகையினூடே வீட்டுக்குள் முகக்கவசம் அணிந்து நுழைந்த தீயணைப்பு வீரர்கள், அங்கிருந்து நான்கு குழந்தைகளை வெளியே தூக்கிக்கொண்டு வந்து முதலுதவி அளித்தும், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவர்கள் யாரையும் காப்பாற்றமுடியவில்லை.

Kyson மற்றும் Bryson (4) Leyton மற்றும் Logan (3) என்னும் அந்த இரண்டு ஜோடி இரட்டைக் குழந்தைகள் அந்த வீடு தீப்பிடிக்கும்போது, வீட்டில் தனியாக இருந்துள்ளது தெரியவந்தது.

பிள்ளைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக என்னென்னவோ திட்டமிட்டிருந்தார்கள்... லண்டன் தீவிபத்தில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாய் கண்ணீர் | Mother Four Brothers Killed London House Fire

பிள்ளைகளின் தந்தையான Dalton Hoath (28)ம், தாய் Deveca Rose (27)ம் பிரிந்துவிட்டிருக்கிறார்கள். தாய், பிள்ளைகளுடன் வாழ, தந்தை வேறிடத்தில் தனியாக வாழ்ந்துவந்திருக்கிறார். சம்பவம் நடந்தபோது, தாய் Deveca ஷாப்பிங் சென்றிருந்திருக்கிறார்.

இந்நிலையில், குழந்தைகளை தனியாக விட்டுச் சென்றதால் குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியது. ஆனால், அந்தப் பெண் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பிள்ளைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக என்னென்னவோ திட்டமிட்டிருந்தார்கள்... லண்டன் தீவிபத்தில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாய் கண்ணீர் | Mother Four Brothers Killed London House Fire

இந்நிலையில், தன் பிள்ளைகளின் துயர மரணம் குறித்து பேசியுள்ள Deveca, அவர்களது இழப்பை தன்னால் ஒரு நாளும் மறக்க இயலாது என்றும், தன் இரண்டு ஜோடி இரட்டைக் குழந்தைகள் இல்லாமல் தான் வாழவேண்டியுள்ளதே என்றும் கதறியுள்ளார்.

என் பிள்ளைகள்தான் என் உயிர், என் வாழ்க்கை, என் உலகம் எல்லாமே என்கிறார் Deveca. அவர்கள் என் இதயம், என் ஆன்மா, எனக்கு எல்லாமே அவர்கள்தான். அவர்கள் இல்லாமல் எதுவுமே எனக்கு நிஜம்போல் தோன்றவில்லை. என்னால் இனி சாதாரணமாக வாழ முடியாது என்று கூறியுள்ளார் அவர்.

அவர்கள் மற்றவர்கள் எல்லாரையும் சந்தோஷப்படுத்திகொண்டிருந்தார்கள். அவர்களை இழந்ததால் நான் இனி எப்போதுமே வருத்தப்பட்டுக்கொண்டுதான் இருப்பேன் என்று கூறும் Deveca, பிள்ளைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக என்னென்னவோ திட்டம் வைத்திருந்தார்கள். ஆனால், இப்போது அவர்களே இல்லை. அவர்கள் அலங்கரித்து வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தையும், அவர்களுக்காக வாங்கி வைத்திருக்கும் புத்தாடைகளையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் என்கிறார் அவர் கண்ணீருடன்!  

பிள்ளைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக என்னென்னவோ திட்டமிட்டிருந்தார்கள்... லண்டன் தீவிபத்தில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாய் கண்ணீர் | Mother Four Brothers Killed London House Fire

பிள்ளைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக என்னென்னவோ திட்டமிட்டிருந்தார்கள்... லண்டன் தீவிபத்தில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாய் கண்ணீர் | Mother Four Brothers Killed London House Fire

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US