காலையில் கோழி கூண்டை திறக்க வீட்டின் பின்பக்கம் சென்ற மருமகள்! மாமியாரின் நிலையை பார்த்து ஏற்பட்ட அதிர்ச்சி
தமிழகத்தில் மருமகளுடன் ஏற்பட்ட சண்டையில் மாமியார் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் மேரி (60). இவர் கணவரை பிரிந்து கடந்த 20 ஆண்டுகளாக தனது மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்தார்.
அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதி மாமியார் மேரியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மேரி மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர்.
நேற்று காலையில் மருமகள் புஷ்பரதி கோழி கூண்டை திறக்க வீட்டின் பின்பக்கம் சென்றார்.
அப்போது மேரி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.