தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் மாமியார் ஓட்டம்
உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்க மாப்பிளை தேடி வந்தார்.
பின் அவரது மகளுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்தை தொடர்ந்து இரு வீட்டாரும் திருமணத்திற்கு பேசி முடிவு செய்தனர்.
வருகிற 16ஆம் திகதி இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில், திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அனைவரும் கொடுத்து வந்தனர்.
மணமகளை விட அவரது தாய் அழகாக இருந்ததால், மாப்பிள்ளைக்கும் மணமகளின் தாய்க்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது.
இதனால் மயங்கிய மாப்பிள்ளை தனது வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார்.
இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி அரட்டை அடித்தனர். அவர்களது நட்பு காதலாக மாறியது.
உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு கேட்டபோது அவர் திருமண ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசி வருவதாக தெரிவித்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், தனது மகளுக்கு துரோகம் செய்துவிட்டு வருங்கால மருமகனுடன் நேற்று முன்தினம் ஓட்டம் பிடித்தார்.
தனது மகளுக்காக வாங்கிய நகைகள், பணம் என அனைத்தையும் எடுத்து சென்று விட்டார்.
மணப்பெண்ணின் தாயை இரவு நீண்ட நேரம் காணவில்லை என உறவினர்கள் சந்தேகம் அடைந்து மணமகனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும் வீட்டில் இல்லை.
இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததை தொடர்ந்து இதுகுறித்து உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்தனர்.
பொலிஸார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |