பெற்ற பிள்ளைகளை தூக்கில் தொங்கவிட்ட தாய்! அடுத்து நிகழ்ந்த விபரீதம்
தமிழகத்தில் தனது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கொந்தப்படிகாரத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(35). இவர் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரர் குடும்பத்துடன் ஈரோட்டில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வெங்கடேசன் சென்றுள்ளார்.
முன்னதாக, தன்னுடன் கோவிலுக்கு வருமாறு வெங்கடேசன் தனது மனைவி நிஷாந்தியை(30) அழைத்தபோது, பிள்ளைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் வர இயலாது என அவர் கூறியுள்ளார். மேலும் இரு பிள்ளைகளுடனும் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார்.
வெங்கடேசன் ஊருக்கு சென்ற பின்னர் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கபக்கத்தினர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நிஷாந்தி தனது பிள்ளைகள் யாழினி(4) மற்றும் பூபன் பார்க்கவன்(2) ஆகியோருடன் தூக்கில் சடலமாக தொங்கியிருந்துள்ளார். முதலில் அவர் தனது பிள்ளைகளை சேலையைக் கொண்டு தூக்கிலிட்டு கொன்றுவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டது பின்னர் தெரிய வந்தது.
(PICXY/TANMOYTHEBONG)
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நிஷாந்தி மற்றும் அவரது மகளுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போயிருக்கிறது. இதனால் இருவரும் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
எனினும், உடல்நிலை இவ்வாறு சரியில்லாமல் போவதால் விரக்தியில் இருந்த நிஷாந்தி, உயிர்வாழ்வதை விட இறப்பதே மேல் என அடிக்கடி கூறியுள்ளார். இந்த நிலையில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். பெற்ற தாயே இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.