கணவன் இறந்த பின் பெற்றோர் வீட்டில் வசித்த 21 வயது இளம்பெண்! வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி
தமிழகத்தில் கணவனை இழந்த மகள் வீட்டில் இரத்தம் கொட்டிய நிலையில் கிடந்ததை கண்ட அவர் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்சி மாவட்டம் பச்சமலை புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவரது மனைவி நிஷா (21). கார்த்திக் கடந்த ஆண்டு 26-ந் திகதி தீ விபத்தில் இறந்து விட்டார்.
இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது 1½ வயது குழந்தை இளவேனில் நிலவனுடன் வசித்து வந்தார்.
கணவரது நினைவு தினத்தையொட்டி நிஷா சோகமாக இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் தனது மகனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தனது இடது கை மணிக்கட்டு பகுதியை நிஷா கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த சமயத்தில் வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பினர். மகளின் நிலையை கண்டும் பேரனின் சடலத்தை கண்டும் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த அவர்கள் நிஷாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உஷா மீது கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.