2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ஆண் நண்பருடன் சென்ற தாய்
2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் செயல்
இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது.
அதாவது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பருடன் பைக்கில் செல்வதற்காக குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
பின்னர், குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் அப்பெண்ணையும், ஆண் நண்பரையும் சில மணி நேரங்களில் கண்டுபிடித்தனர்.
பின்னர், பெண்ணின் கணவரை தொடர்பு கொண்ட பொலிஸார் குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |