பச்சிளம் குழந்தையை பெண் கூட்டாளியுடன் இணைந்து கொன்ற தாய்: தந்தைக்கு கிடைத்த ஆதாரம்
தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட சம்பவத்தில் தாய் மற்றும் அவரது பெண் கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையை கொன்ற தாய்
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியை சேர்ந்த தாய் பாரதி என்ற பெண் அவரது பெண் கூட்டாளி சுமித்ரா உடன் இணைந்து 5 மாத பச்சிளம் குழந்தையை கொன்ற சம்பவத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தந்தை சுரேஷ் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நவம்பர் 5ம் திகதி சின்னட்டி கிராமம் என்ற பகுதியில் நடந்துள்ளது.

கணவருக்கு ஏற்பட்ட சந்தேகம்
ஆரம்பக்கட்ட தகவலின் படி, குழந்தை பால் குடித்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததாகவும், பின்னர் உடனடியாக கேலமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குழந்தை இறப்பு தொடர்பாக சந்தேகம் அடைந்த குழந்தையின் தந்தை சுரேஷ், மனைவி பாரதியின் செல்போனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளை பரிசோதித்த பிறகு மகன் உயிரிழப்பு தொடர்பாக சந்தேகம் இருப்பதாக பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
கணவன் சுரேஷ் பொலிஸாருக்கு வழங்கிய ஆதாரத்தில், குழந்தையை கொன்றதை மனைவி பாரதி ஒப்புக் கொண்டது தொடர்பான ஆதாரத்தையும் வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
மனைவி பாரதி மற்றும் கூட்டாளி சுமித்ரா இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக உறவில் இருந்து வந்த நிலையில் குழந்தை பிறந்த பிறகு, இருவராலும் ஒன்றாக நேரம் செலவழிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |