பிரித்தானியாவின் நடைபாதையில் சடலமாக கிடந்த 2 குழந்தைகளின் தாய்!
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் பெண்ணொருவர் நடைபாதையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடைபாதையில் சடலமாக கிடந்த பெண்
கிரேட்டர் மான்செஸ்டரில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் நடைபாதையில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர் கெர்ரி நியூமன் (40) என்றும், இரண்டு குழந்தைகளின் தாய் என்றும் தெரிய வந்தது.
மேலும் துப்பறியும் நிபுணர்களும் விசாரணையில் பொலிஸாருடன் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 48 வயது ஆண் ஒருவரும், 52 வயது பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணை
அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் கெர்ரியின் உடல் பிரீஹோல்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் கெர்ரியின் உடல் கைப்பற்றப்பட்டபோது அந்த பாதையை பொலிஸார் மூடினர்.
தலைமை ஆய்வாளர்
துப்பறியும் தலைமை ஆய்வாளர் ரேச்சல் ஸ்மித் கூறுகையில், 'மீண்டும், இந்த கடினமான நேரத்தில் கெர்ரியின் அன்புக்குரியவர்களுக்கு எனது உண்மையான மற்றும் இதயப்பூர்வமான அனுதாபங்கள். இந்த விசாரணை தொடரும் நிலையில் எங்கள் அதிகாரிகளும், சிறப்பு அதிகாரிகளும் அவரது குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளனர்.
மேலும் கெர்ரிக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அவரது துயர மரணம் தொடர்பான விசாரணை வேகத்தில் நகர்கிறது.
சாத்தியமான அனைத்து விசாரணைகளையும் நாங்கள் தொடர்ந்து முடித்து வருகிறோம், இந்த முயற்சிகள் காரணமாக இரண்டு சந்தேக நபர்களை எங்களால் கைது செய்ய முடிந்தது. மேலும் அவர்கள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்' என தெரிவித்துள்ளார்.
Men Media
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |