மகன் இறந்த நிலையில் பறிபோன தாயின் உயிர்! பலாப்பழம், குளிர்பானம் காரணமா? மர்ம மரணங்கள்

Tamil nadu
By Raju Jun 22, 2022 09:45 AM GMT
Report
180 Shares

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில், அவரது தாயாரும் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரின் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வேல்முருகன்-பரணி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாய் பரணி தனது பிள்ளைகள் இனியா மற்றும் பரணிதரனுடன் ஒன்றாக வீட்டில் உணவு உண்டுவிட்டு பலாப்பழம் சாப்பிட்டுள்ளார். உடனே குளிர்பானமும் குடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மூவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிறுவன் பரணிதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொலிசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தாய் பரணியை சிறுவனின் உடல் அடக்கத்திற்காக உறவினர்கள், மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்றுள்ளனர்.

மகன் இறந்த நிலையில் பறிபோன தாயின் உயிர்! பலாப்பழம், குளிர்பானம் காரணமா? மர்ம மரணங்கள் | Mother Son Mysterious Death Cuddalore

அதன் பின்னர் பரணிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் பரணி மற்றும் அவரது மகள் இனியா இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாய் பரணியும் நேற்று உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மகள் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறுகையில்,

பலாப்பழம் சாப்பிட்டு விட்டு தொடர்ந்து குளிர்பானம் அருந்துவதால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே உண்மை தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மகன், தாய் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US