ஹிஜாபுக்கு தடை.. கர்நாடகாவை தொடர்ந்து மற்றொரு இந்திய மாநிலம் அதிரடி!
பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர மத்தியப் பிரதேச மாநில அரசு தடை விதித்துள்ளது.
கர்நாடகாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை, கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் செயல் எனக் கூறி வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதித்தது.
கர்நாடக அரசாங்கத்தின் செயலுக்கு இந்திய அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சி செய்யும் மற்றொரு இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் தடை செய்யப்படும் என அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு இந்தர் சிங் பர்மர் அளித்த பேட்டியில், ஹிஜாப் பள்ளி சீருடையின் ஒரு அங்கமாக இல்லை மற்றும் ஆடை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
பள்ளி சீருடைகள் தொடர்பான பிரச்னையை பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்யும்.
ஹிஜாப், பள்ளி சீருடையின் ஒரு அங்கமாக இல்லை. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும்.
இத்தகைய மரபுகளை வீட்டில் மட்டுமே பின்பற்ற வேண்டும். பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்வோம்.
அடுத்த கல்வி ஆண்டிற்கான பள்ளி சீருடை தொடர்பான முக்கிய அறிவுரைகள் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பர்மர் தெரிவித்துள்ளார்.