நடிகர் விவேக்கின் அந்த கனவை நான் நிறைவேற்றுவேன்! அதிரடியாக அறிவித்த பிரபலம்: ரசிகர்கள் வாழ்த்து
நடிகரான விவேக் உயிரிழந்த நிலையில், அவரின் கனவை நான் நிறைவேற்றுவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.பி., சந்தோஷ் குமார் அறிவித்துள்ளார்.
பிரபல காமெடி நடிகரான விவேக், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த நடிகர் விவேக்கிற்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது கனவாக இருந்தது.
இதனால் விவேக் க்ரீன் கலாம் என்ற அமைப்பை விவேக் உருவாக்கினார். இந்த திட்டத்தின் கீழ் விவேக் இதுவரை 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
இன்னும் அவரது கனவை நிறைவேற்ற பல லட்சம் மரங்களை நடவேண்டும் என்பதால், அவரின் ஆசை கடைசிவரை நிறைவேறாமல் போய்விட்டதே என்று ரசிகர்கள் பலரும் வேதனையாக கூறி வந்தனர்.
Will make sure that his wish be fulfilled. Thiru Vivek’s goal was to plant 1 crore saplings and he already could reach up to 32.5Lakhs. I personally see that the remaining task of his #GreenKalam project be completed under our #GreenIndiaChallenge and dedicate to him.#RIPVivekh pic.twitter.com/MYGFWOf6p1
— Santosh Kumar J (@MPsantoshtrs) April 17, 2021
இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.பி., சந்தோஷ் குமார், ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற விவேக்கின் கனவை தான் நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். க்ரீன் கலாம் திட்டத்தை தான் முழுமை அடைய செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.
இது பற்றி சந்தோஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், விவேக்கின் லட்சியம் ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்பது. அவர் ஏற்கனவே 32.5 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
க்ரீன் கலாம் திட்டத்தின் மீதமுள்ள இலக்கைதனிப்பட்ட முறையில் நான் நிறைவேற்ற உள்ளேன்.
க்ரீன் இந்தியா சேலஞ்ச் இயக்கத்தின் கீழ், இந்த பணிகள் செய்து முடிக்கப்படும். அதனை விக்வேக்கிற்காக நான் சமர்ப்பிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்