பிரித்தானியா மகாராணியை பாதுகாக்க எம்.பி-களுக்கு தடை! கசிந்த முக்கிய தகவல்
அடுத்த மாதம் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் பிரித்தானியா மகாராணி வருடாந்திர உரை நிகழ்த்த உள்ள நிலையில், இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள பெரும்பாலான எம்.பி-களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மே 17 அன்று பிரித்தானியா நாடாளுமனறத்தில் மகாராணியின் வருடாந்திர உரை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் குதிரை வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் எலிசபெத் மகாராணி, வருடாந்திர உரையில் அடுத்த 12 மாதங்களுக்கு முன்மொழியப்பட்ட சட்டங்களை வகுப்பார்.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொள்ளும் பிரித்தானியா எம்.பி-க்கள், கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும், மேலும் ராணியைப் பாதுகாக்க சுயமாக தனிமைப்படுத்த வேண்டியிருக்கும்.
இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளைப் போலவே, இந்த நிகழ்வும் கடும் கட்டுப்பாடுகளுனம் நடக்கும் என கூறப்படுகிறது.
கடுமையான சமூக இடைவெளி விதிகளை கடைபிடிக்க மே 17 அன்று நடைபெறும் விழாவில் பெரும்பாலான எம்.பி.க்கள்தடை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரிஸ் ஜான்சன் மற்றும் காமன்ஸ் சபாநாயகர் Sir Lindsay Hoyle உட்பட இந்நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளவர்கள், இதில் கலந்துகொள்ள கொரோனா இல்லை என்ற சோதனை முடிவு தேவைப்படும்.
மகாராணியுடன் நெருங்கிய தொடர்புக்கு வருபவர்கள் நிகழ்வுக்கு முன் 36 மணி நேரம் சுயமாக தனிமைப்படுத்த வேண்டியிருக்கும்.