இந்திய அணிக்குள் மீண்டும் டோனி! இன்றைய 2வது டி20 போட்டியில் சம்பவம் இருக்கு.... உற்சாகத்தில் ரசிகர்கள்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா பங்கேற்கும்போது டோனி தனது பங்களிப்பை அணிக்காக கொடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இது இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்தின் சொந்த ஊர்.
சமீப காலமாகவே ரன்களை குவிக்க திணறி வரும் ரிஷப் பந்த், உள்ளூர் மைதானத்தில் அதிரடியாக விளையாடி பார்முக்கு திரும்ப அதிக வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு ஓய்வுக்கு சென்ற முன்னாள் கேப்டன், ஆலோசகர் மகேந்திரசிங் டோனி, தற்போது ராஞ்சியில் தங்கித்தான் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் திடீரென்று நேற்று ராஞ்சி ஜே.எஸ்.சி.ஏ மைதானத்திற்கு சென்று U-19 வீரர்களை சந்தித்துப் பேசினார். மேலும் அங்குள்ள டென்னிஸ், உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களுக்கு சென்று வந்தார்.
இதனையடுத்து ராஞ்சியில் உள்ள இந்திய அணிக் குழுவை சந்தித்துப் பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் பந்த் தற்போது பார்ம் அவுட்டில் இருக்கும் நிலையில், உள்ளூர் மைதானத்தில் விளையாடும்போது டோனி அருகில் இருந்தால், ரிஷப் பந்திற்கு கூடுதல் தெம்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.
இதன்மூலம் அவர் தனது கெத்தை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறும் போட்டியின்போது டோனியை காணலாம் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் சமூகவலைதளத்தில் டோனியின் பெயரை ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.