கொரோனா காலத்தில் சளி தொல்லையால் அவதியா? இந்த மூலிகை டீயை போட்டு குடிங்க! சரியாயிடும்...
கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம்.
இதற்கு ஒரு சில இயற்கை மூலிகை பானங்கள் கூட பெரிதும் உதவியாக இருக்கின்றது.
நமது வீட்டிலேயே எளிமையாக கிடைக்கும் சில மூலிகை கலந்த மசாலா பொருட்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், வைரஸ் காரணமாக நுரையீரலில் ஏற்படும் சளியை குறைக்கவும் உதவுவதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் கொரோனா காலத்தில் சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரு சூப்பரான மூலிகை பானம் ஒன்றை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்
தேவையான பொருட்கள்
- இஞ்சி -1 இடித்தது
- இலவங்கப்பட்டை- 1 சிறியது
- துளசி இலைகள் -1/2 தேக்கரண்டி
- கற்பூரவல்லி இலை - சிறிது
- கருப்பு மிளகு -3
- ஏலக்காய் -2 பொடித்தது
- பெருஞ்சீரகம்-1/4 தேக்கரண்டி
- ஓமம் - 1 சிட்டிகை
- சீரகம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை
ஒரு கடாயில் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றவும். அதில், மேல் குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் போட்டு தண்ணீர் பாதியாக குறையும் வரை நன்றாக கொதிக்க விடவும். அதன்பிறகு அந்த பானத்தை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இப்போது ஆரோக்கியமான தேநீர் தயார். ஒரு நாளைக்கு தினமும் 2 முறை இந்த பானத்தை அருந்தலாம். இதனுடன் நீங்கள் சில சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
ஏற்கனவே தேநீர் தயாரித்த அதே பொருட்களை மறுமுறை தேநீர் தயாரிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அதில் உள்ள நன்மைகள் எந்த விதத்திலும் குறையாது.
நன்மைகள்
-
இஞ்சி, இலவங்கப் பட்டை, துளசி, கருப்பு மிளகு, பெருஞ்சீரகம், சீரகம் மற்றும் ஓமம் போன்றவை அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
-
எனவே இந்த பொருட்களை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கும்போது, நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
-
மது நுரையீரல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க இதுபோன்ற தேநீரை நாம் பயன்படுத்தலாம். மேலும் நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியை குறைத்து விரைவாக குணமாக இது உதவுகிறது.
யார் குடிக்கக் கூடாது?
இது ஒரு ஆரோக்கிய பானம் என்றாலும் ஒருவேளை நீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாலோ அல்லது கர்ப்பமாக இருந்தாலோ இந்த தேநீரை அருந்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.