முடக்கத்தான் கீரை சட்னி... எப்படி இலகுவாக செய்யலாம்?
பொதுவாகவே இட்லி, தோசை, பூரி சப்பாத்தி போன்ற உணவு வகைகளுக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி என இந்த இரு வகை சட்னிகளை செய்து சாப்பிடுவதே வழக்கம்.
ருசிக்காக மாத்திரம் சட்னி செய்து சாப்பிடாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சட்னி செய்து சாப்பிடலாம்.
அந்தவகையில் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருப்பது கீரை மாத்திரமே. கீரையில் சட்னி செய்வது என்பது மிகவும் எளிதான ஒரு விடயம். இது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
இதை வைத்து கீரை சாதமும் செய்து சாப்பிடலாம். எனவே எப்படி இலகுவாக முடக்கத்தான் கீரை சட்னி செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- முடக்கத்தான் கீரை – 1/4 கப்
- துருவிய தேங்காய் – 1/2 கப்
- புளி – தேவைக்கேற்ப
- உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
- வரமிளகாய் – 3
- பூண்டு – 3 பல்
- கடுகு – 1/4 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில்எண்ணெய் ஊற்றி முடக்கத்தான் கீரையும் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து இன்னொரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
- பின் அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து புளி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு மற்றும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- இறுதியாக தாளித்து வைத்ததை அரைத்து வைத்ததுடன் சேர்த்தால் ஆரோக்கியமான முடக்கத்தான் கீரை சட்னி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |