வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க ஆலோசிக்கிறீர்களா? உங்களுக்காக கடன் வழங்கும் மத்திய அரசு
பொதுவாகவே அனைவருக்கு ஒருவருக்கு கீழ் இருந்து வேலை செய்யாமல் தன் சொந்த முயற்சியில் தனக்கென ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தி செல்லதான் விரும்புவார்கள்.
அந்தவகையில், அனைவரும் விரும்பும் பிஸ்கட் தயாரிப்பு, சமையல் சார்ந்த பொருட்கள், அப்பளம் தயாரிப்பு, ஜெல்லி, ஜாம் போன்ற பொருட்களை தயாரித்து சிறு தொழில்களை செய்து படிப்படியாக வளர்ச்சியடையலாம். அப்படி வீட்டில் இருந்த படி தொழில் சுய தொழில் செய்து முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு சில திட்டத்தின் கீழ் கடன் வழங்கவுள்ளது.
கடன் விபரங்கள்
வீட்டில் இருந்தபடி சுயதொழில் செய்ய நினைப்பவர்களுக்காக முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மூன்று வகையான கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது அவற்றில்,
- சிஷு முத்ரா கடன் திட்டத்தின் மூலம் 50ஆயிரம் வரை கடன் பெறலாம்.
- கிஷோர் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் 50ஆயிரத்திலிருந்து 5 இலட்சம் வரைக்கும் கடன் பெறலாம்.
- தருண் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் 5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் வரைக்கும் கடன் பெறலாம்.
நீங்கள் சிறிய அளவில் பிஸ்கட் தயாரிப்பு மையம் ஒன்றை அமைக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படும். இதில் 90ஆயிரம் மாத்திரம் நீங்கள் முதலீடு செய்தால் எஞ்சிய பணத்தை முத்ரா திட்டத்தின் கீழ் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான கால வரம்பு கடனாக 2.50 இலட்சமாகவும், மூலதன கடனாக 1.75 இலட்சமும் பெற்றுக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |