சிங்கள பேரினவாதம் ஈழ தேசம் முழுவதையும் தமிழர் மனித புதைகுழியாக்கிவிட்டதா? எழுத்தாளர் தீபச்செல்வன் விளக்கம்
இலங்கை அரசாங்கத்தின் நீதி கட்டமைப்பானது உண்மையிலேயே நீதியுடன் செயல்பட்டு இருந்து இருந்தால் தமிழர்கள் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது என்று எழுத்தாளர் தீபச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் தீபச்செல்வன் நேர்காணல்
இலங்கை முல்லைத்தீவின் கொக்குதொடுவாய் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது இது தொடர்பான விஷயத்தில் எழுத்தாளர் தீபச்செல்வனிடம் ஐபிசி நெறியாளர் தாட்சாயணி நடத்திய நேர்காணலில் குறித்த வீடியோ இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது, அத்துடன் நேர்காணலில் நெறியாளர் தாட்சாயணி எழுப்பிய சில கேள்விகளும் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் இருந்து கொக்குதொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்று வருகிறது, இன்றும் நடைபெற்று வருவதாக நினைக்கிறேன் இது தொடர்பான கள விவரங்கள் என்னவென்று தெரியுமா?
என்னென்றால் நீர்வடிகால் திணைக்களத்தில் அதுவும் அரசு சார்ந்த ஒரு திணைக்களத்தில் அகழ்வு செய்யும் போது மனித உடலங்கள் கிடைக்கிறது என்றால் மனித உடல்களை எங்கு புதைத்தோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை என்ற நிலைப்பாட்டிற்கு நாம் வரலாமா?
தமிழீழ புலிகளின் காலத்தில் இந்த உடலங்கள் புதைக்கப்பட்டவை என்று சொன்னால் அவவை தனியாக புதைக்கப்பட்டு அவர்களுக்கான நடுகல்லோ, கல்லறைகளோ அல்லது நினைவிடங்களோ அதில் இருந்து இருக்க வேண்டும் அல்லவா, ஆனால் அப்பகுதியில் குவியல் குவியலாக உடலங்கள் கொட்டப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
இது போன்ற பல கேள்விகளுக்கு எழுத்தாளர் தீபச்செல்வனிடம் தன்னுடைய நேர்காணலில் விளக்கம் அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |