வெறும் இருமல் தான்: பரிசோதனையில் இளம் தாயாரை மொத்தமாக நொறுங்க வைத்த சம்பவம்
இளம் தாயார் ஒருவர் இருமும் போது தொண்டையில் நீண்ட நாட்களாக ஒரு வித்தியாசத்தை உணர்ந்த நிலையில், அது என்ன என்பதை அறிந்து மொத்தமாக நொறுங்கிப் போயுள்ளார்.
நுரையீரல் புற்றுநோயுடன்
கலிபோர்னியாவை சேர்ந்த 34 வயது Ashley Vassallo என்ற இளம் தாயார் தற்போது முற்றிய நுரையீரல் புற்றுநோயுடன் போராடி வருகிறார். மட்டுமின்றி, தமது நிலை குறித்தும் மக்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் பொருட்டும் செயல்பட்டு வருகிறார்.
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளை அவர் தொடர்ந்து எதிர்கொண்டு வந்தாலும், மருத்துவர்களால் உறுதி செய்யப்படாமல், நீண்ட ஓராண்டு காலம் சிகிச்சை முன்னெடுக்க தாமதமாகியுள்ளது.
ஆபத்தான கட்டத்தில் தான் Ashley Vassallo சிகிச்சை முன்னெடுத்துள்ளார். தமது தொண்டையில் ஒரு வித்தியாசமான உணர்வு இருந்து வந்ததாகவும், இருமும் போது மார்பு நொறுங்கும் வலி இருந்ததாகவும், விழுங்குவதும் கடினமாகிவிட்டது என்றும், இருமல் விட்டு மாறவே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருமல் இருப்பதால் தம்மால் சிரிக்கவே முடியாமல் போனது என்றும், சோர்வடைந்து, உடல் எடை குறைந்து, தமது இரண்டு இளம் மகன்களை கவனிக்க முடியாமலும் போராடியதாக குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோயை உறுதி செய்யும் முன்னர் சுமார் 20 முறை மருத்துவரை சந்தித்துள்ளதாகவும், ஆனால் தமது அறிகுறிகளை அவர்களால் அடையாளப்படுத்த முடியாமல் போனது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது
இதனையடுத்தே, தமக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் தனிப்பட்ட முறையில் அவர் ஒரு ஆய்வை முன்னெடுத்துள்ளார். அதில் இருந்தே, தாம் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதும், வாழ்க்கைமுறை அல்லது வயது என்பதை கடந்தும் யாருக்கு வேண்டுமானாலும் நுரையீரல் புற்றுநோய் வரலாம் என்பதை உணர்ந்ததாகவும் Ashley Vassallo தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் தமது விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும், பலரும் தேவையில்லாத சிந்தனை என தமது நிலையை புறக்கணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல மாதங்கள் தொடர்ந்து கெஞ்சிய பின்னரே CT ஸ்கான் முன்னெடுக்க மருத்துவர் ஒருவர் பரிந்துரைத்துள்ளதாக கூறும் அவர், புற்றுநோயின் நான்காவது நிலையில் தாம் அப்போது இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2023 மார்ச் மாதம் அவரது வலப்பக்க நுரையீரல் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் Oakland மருத்துவ நிபுணர் ஒருவரை அணுகி தொடர் சிகிச்சையை முன்னெடுத்துள்ளார்.
தற்போது தமது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது என குறிப்பிடும் அவர், முன்பு இருந்ததை விட சிறப்பாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது கயாக்கிங் செய்ய முடிகிறது, சைக்கிள் ஓட்டுவதுடன், பிள்ளைகள் இருவரையும் கவனிக்க முடிகிறது என்றவர், என்னால் மீண்டும் சிரிக்க முடிகிறது, நான் மீண்டும் வேலைக்கும் திரும்பி விட்டேன் என பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |