மும்பை போட்டுள்ள பக்கா பிளான்! சூர்யகுமாரை கழட்டிவிட்டு டெல்லி வீரரை ஏலத்தில் எடுக்க முடிவு?
மும்பை இந்தியன்ஸ் அணி, இளம் வீரர் ஒருவர் மீது ஏலத்தில் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு பத்து அணிகளுடன் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அணியிலும் 4 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு, மெகா ஏலத்தை பிசிசிஐ நடத்தவுள்ளது.
அதன் படி ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டு, அந்த வீரர்களின் பட்டியலை வரும் 30-ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும். அதன் படி மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித், ஜஸ்ப்ரிட் பும்ரா, இஷான் கிஷன் மற்றும் கிரண் பொல்லார்ட் ஆகியோரை தக்க வைத்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை அணியின் முக்கிய வீரரான சூர்யகுமார் யாதவ்வை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துக் கொள்ளாமல் இஷான் கிஷனை அந்தணி தக்க வைத்துக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆனால், மும்பை அணி அதை ஈடுசெய்யும் வகையில், டெல்லி அணி வீரரான ஸ்ரேயாஸ் அய்யரை ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாம்.
ஏனெனில் வருங்கால கேப்டனை கருத்தில் கொண்டு ஸ்ரேயாஸ் அய்யரை மும்பை அணி எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை அணியின் தற்போதைய கேப்டன் ஆன ரோகித் சர்மா, கிரண் பொல்லார்ட்டும் ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருப்பதால், அதற்குள் ஒரு நல்ல கேப்டனை உருவாக்கி கொள்ள மும்பை இந்தியன்ஸ் பக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.