மும்பை இந்தியன்ஸ் இந்த 4 வீரர்களை தான் தக்க வைக்கும்! இர்பான் பதான் கணிப்பு
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரவுள்ளதால், வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலில், மும்பை அணி எந்த வீரர்களை தக்க வைக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு இரண்டு புதிய அணிகளுடன், 10 அணிகள் என மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால் எட்டு ஐபிஎல் அணிகளுக்கும் 4 வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை வரும் 30-ஆம் திகதிக்குள் சொல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்தெந்த அணி வீரர்களை தக்க வைக்கும் என்ற விவாதம் கடந்த சில நாட்களாகவே சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரர்களை தக்க வைக்கும் என்ற கணித்துள்ளார்.
அவர் கணிப்பின் படி, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ரா வெளிநாட்டு வீரர்களில் கிரண் பொல்லார்ட் மற்றும் இஷான் கிஷான் என கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை மும்பை அணி இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்ட்யா என இருவரில் யாரை எடுப்பது என்பதில் சிக்கல் நீடிக்கலாம்.
ஆனால் இஷான் கிஷனை தான் மும்பை அணி முதல் விருப்பத்தில் வைத்திருக்கும். அதன் பின்னர் ஹார்திக் பாண்ட்யா இருக்கலாம்.
ஹார்திக் பாண்ட்யா கடந்த ஒரு ஆண்டுகளாக எந்த ஒரு அற்புதமான ஆட்டத்தையும் வெளிப்படுத்ததால், தன்னை பொறுத்தவரை ரோகித், பும்ரா, கிரண் பொல்லார்ட், இஷான் கிஷன் அல்லது ஹார்திக் பாண்ட்யா என்று குறிப்பிட்டுள்ளார்.