மாரடைப்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்
மாரடைப்பு சிகிச்சைக்காக மாரடைப்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உடல்நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான முரளிதரன், மாரடைப்பு சிகிச்சைக்காக சென்னைியல் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், முரளிதரனுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
முரளிதரனின் உடல்நிலை மிகவும் சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
49 வயதான முரளிதரனுக்கு மார்ச் மாத இறுதியில் இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது, ஆஞ்சியோபிளாஸ்டி என்பது அடைப்பை நீக்க வழக்கமாக மேற்கொள்ளப்படும் சிகிச்சை.
முரளிதரன் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை, அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொண்டது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலம் தேறிய பின் முரளிதரன் ஐதராபாத் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.