முரளிதரன் எப்படி இருக்கிறார்? தற்போதைய நிலை என்ன? வெளியான மகிழ்ச்சி தரும் செய்தி
இலங்கை அணியின் முன்னாள் வீரான முத்தையா முரளிதரன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று திடீரென்று அவருக்கு பயிற்சியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது அவரை, பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் அவரது உடல்நலம் தேறியுள்ளதாகவும் அவர் இன்றைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர் தன்னுடைய வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என்றும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் ஹைதராபாத் அணியுடன் உடனடியாக இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.